ரணில் காசுடன் தயார்:சுமா பேரம் பேசுவாராம்!

 


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசு கட்சி வேட்பாளரை நியமிக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கு பல தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் அண்மையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்கான கட்டுப் பணத்தை ஏற்கனவே கட்டியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார் .

இதனிடையே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாட்டின்றி முடிவடைந்ததாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்டதலைவர்  ஒருவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்ஷ நாளை (28) சந்திக்கவுள்ளதாக அந்த தலைவர்குறிப்பிட்டுள்ளார்

No comments