சுமா கருத்து சொந்த கருத்து:சிறீதரன்!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை.கட்சி விரைவில் கூடி தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என்று இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானம் எடுத்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சிறீதரன் ‘இலங்கை தமிழ் அரசுக்கட்சி தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிப்பதா என்பது தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலைப்பாடு தொடர்பில் யாரேனும் பேசினால் அது அவர்களின் சொந்த விருப்பு மட்டுமே – அது கட்சியின் தீர்மானம் அல்ல. ஜனாதிபதித் தேர்தல் திகதி இப்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி விரைவில் கூடி தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என தெரிவித்துள்ளார்
Post a Comment