பிரதமருக்கே விளக்கமில்லையாம்!



அரசியலமைப்பு சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நியமனங்களை கேள்விக்குட்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்ற கூற்று முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று பிரதமர் தினேஸ் குணவர்தன தற்போதைய பொலிஸ் மாஅதிபரை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை வழங்கியுள்ள அங்கீகாரத்தை நீதிமன்றத்தினால் மாற்றியமைக்க முடியாது என  பாராளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தார்.

தற்போதைய பொலிஸ் மாஅதிபருக்கு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடையுத்தரவுக்கு எந்தவொரு சட்ட அடிப்படையும் இல்லை எனவும் பிரதமர் தனது விசேட உரையில் சுட்டிக்காட்டினார்.  

இதனால் குறித்த தடையுத்தரவை பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிரதமர் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே அரசியலமைப்பு சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நியமனங்களை கேள்விக்குட்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லையென்பதை நிராகரித்து சட்டத்தரணிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். 


No comments