சீன வீட்டு திட்டம் எமக்கு வேண்டாம்


சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம் வடக்கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் எனவும் நிரந்தர வீட்டு திட்டத்தினை மீனவர்களுக்கு வழங்குமாறும் யாழ்  சுழிபுரம்  அலைமகள் கடற்றொழிலாளர் கிராமிய கூட்டுறவு அமைப்பின்  சிரேஷ்ட உறுப்பினர் கனகசபை ரவீந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார் 

யாழ் சுழிபுரத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொருத்து வீட்டு திட்டம் எமக்கு உகந்தது அல்ல நாங்கள் கடற்கரையினை அண்டிதான் வாழ்ந்து வருகின்றோம். 

இயற்கை அனர்தங்களுங்கு அஞ்சி வாழ வேண்டிய சூழல் ஏற்படும் .ஆகவே எங்களுக்கு பொருத்தமற்ற இவ்வாறான வீட்டு திட்டங்களை முற்றிலும் நிராகரிக்கின்றோம். 

கடற்றொழிலாளர்களாகிய எமக்கு நிரந்தரமான வீட்டுத்திட்டம் அனைவரும் ஏற்றுக் கொள்ள கூடிய வகையில் பாதிக்கப்பட்ட அனைத்து கடற்றொழிலாளர்களுக்கும் அவர்களுக்கு வழங்கவேண்டும்.

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு சீன அரசு உதவி வழங்குகின்றது என சொல்லுகின்றனர். இற்றைவரை எமது அலைமகள் கடற்றொழிலாளர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கப் பெறவில்லை என மேலும் தெரிவித்தார்

No comments