விளக்கேற்ற ஜேவிபி அனுமதிக்குமாம்!
தமிழ் மக்களது விடுதலைப்போராட்டத்தை முடக்க இலங்கை இராணுவத்திற்கு ஆட்சிதிரட்டி வழங்கியிருந்ததாக ஜேவிபி மீள மீள தெற்கில் பிரச்சாரம் செய்துவருகின்றது.
இந்நிலையில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு உறவினர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் உரிமை உண்டு என கூறியுள்ள ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அவர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் தோழர்களுக்கு போரில் இறந்தவர்களை நினைவு கூர உரிமை உண்டு என்று கூறியதுடன், சம்பூரில் முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நடத்தியதற்காக 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளாhர்.
இறந்தவர்களை நினைவுகூரும் நாள் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளதாகவும், அதேபோன்று உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு இலங்கையர்களுக்கும் உரிமை உண்டு .
போரில் இறந்தவர்களை நினைவு கூரும் உரிமையானது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமை எனவும், இலங்கையிலும் அந்த உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் விஜித ஹேரத்,; தெரிவித்துள்ளார்.
Post a Comment