அக்னெஸ் கலமார்ட் முள்ளிவாய்க்காலில்!
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நாளை 18ம் திகதி பங்கெடுக்கவுள்ளார்.
நேற்று இலங்கைக்கு வருகை தந்திருந்த அவர் நாளை முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்களை சந்திக்கவுள்ளார்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்டின் தெற்காசியாவிற்கான முதல் விஜயம் இதுவாகும்.
அக்னெஸ் கலமார்ட் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இலங்கையில்; தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே யுத்த காலத்தில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் விடயத்தில் ஒட்டுமொத்த சமூகமும் உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டும் என முன்னாள்; சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல்போன இலங்கை பிரஜைகளை நினைவுகூர்வதற்கான தடைகளை கரு ஜெயசூரிய கண்டித்துள்ளார்.
நாட்டை இருண்ட யுகத்துக்குள் கொண்டுசெல்லாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பது ஒட்டுமொத்த சமுதாயத்தினரதும் பொறுப்பாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு துர்பாக்கிய சம்பவங்களினால் உயிரிழந்த மற்றும் காணாமல் போன அனைவரை எண்ணியும் மிகுந்த மன வேதனை அடைவதாகவும் கரு ஜெயசூரிய கூறியுள்ளார்.
Post a Comment