இராணுவ மயமாகும் மக்கள் சக்தி!
முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவை ஓரங்கட்டும் வகையில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரால் மகேஸ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்.
அத்துடன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க ஐக்கிய படைவீரர் சக்தியின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1981ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி சேனநாயக்கா இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டார்.
அதனையடுத்து இராணுவத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்ற பின்னர், அவர் 2019 ஆகஸ்ட் (20) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டார்.
பின்னராக கோத்தபாயவிற்கு அஞ்சி நாட்டை விட்டும் வெளியேறியிருந்தார்.
பின்னர், சேனநாயக்க 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் கீழ் கோத்தபாயவிற்கு எதிராக போட்டியிட்டு முக்கிய அரசியல் கட்சிகளின் மூன்று வேட்பாளர்களுக்குப் பிறகு நான்காவது இடத்தைப் பிடித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிற்கும் )கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமைகள் நீடித்து வரும் நிலையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Post a Comment