சுருட்டிக்கொண்ட நீதிபதி:பிணை அனுமதி!

 


இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் எழுந்த அழுத்தங்களையடுத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விடயத்தில் கைதானவர்கள் அவசர அவசரமாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திருமலையின் சேனையூர் பிள்ளையார் கோவிலில் வைத்து சென்ற 12 ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமைக்காக,இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நால்வருமே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நவரெட்ணராஜா ஹரிகரகுமார்(43), கமலேஸ்வரன் விஜித்தா(40), கமலேஸ்வரன் தேமிலா(22), செல்வ வினோத்குமார் சுஜானி(40)ஆகிய நால்வரும் இன்று (17) மூதூர் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் இவர்களை மூதூர் நீதிபதி தஸ்னீம் பௌசான் பானு விடுவித்தார்.அத்துடன் வழக்கு இம்மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வழக்கு மீளவும் நகர்த்தல் பத்திரம் மூலம் எதிராளிகள் தரப்பினால் அழைக்கப்பட்ட போது தாம் முன்னர் முன்வைத்த சட்டப்பிரிவின் அடிப்படையிலான குற்றச்சாட்டை  விலக்கிக் கொள்வதாக இலங்கை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

அதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்க விதிக்கப்பட்ட தடையும் நேற்றைய தினம் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments