சீமானின் வெற்றி ஈழத்தமிழரின் தேவை!



தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் செயற்பாடுகளையே இலங்கை அரசும் அதனோடு சேர்ந்து இயங்கும் ஒரு சில தமிழ் அரசியல் தலைமைகளும் முன்னெடுத்து செயல்படுத்துகின்றனர். காரணம் ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவாக பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் தாய் தமிழக உறவுகளுக்கும் ஈழத் தமிழ் உறவுகளுக்கும் இடையில் மோதலை தோற்றுவிப்பதில் இலங்கை அரசும் இந்திய புலனாய்வு பிரிவின் ரோ அமைப்பும் இணைந்து பல சதித் திட்டங்களை திரை மறைவில் செயல்படுத்துகின்றனர். அதன் ஒரு அங்கமே இலங்கை இந்திய மீனவர் விவகாரம் என முன்னாள் தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர்.

இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் இறுதி யுத்த காலப்பகுதியில் ஈழத் தமிழ் உறவுகளுக்காக தங்களின் இன்னுயிர்களை அர்ப்பணித்த எமது தமிழக உறவுகளுக்கும் எமக்கும் இடையில் மன மன கசப்பினை விதைக்கும் நோக்கில் சுலபமாக தீர்க்கப்பட வேண்டிய இந்திய மீனவர் விவகாரம் பூதாகரமாக்கப்படுகின்றது.

எப்போதும் தமிழக அரசியல் அரங்கில் ஈழத் தமிழர் விவகாரம் கட்டாய பேசு பொருளாக உள்ளது.

தற்போது தமிழகத்தில் தேர்தல் இடம்பெறவிருக்கும் சந்தர்ப்பத்தில் ஈழத் தமிழர் விவகாரம் இம்முறை பாரிய அளவில் முக்கியத்துவம் பெறவில்லை. இந்திய இலங்கை மீனவர் விவகாரத்தை பூதாகரமாக்கி அதனை வைத்து இம்முறை தமிழக தேர்தல் அரசியல் களத்தில் ஈழத் தமிழர்களை பிரச்சனையை ஓரங்கட்டி உள்ளார்கள்.

இதில் ஈழத் தமிழருக்காக பல்வேறுபட்ட வகையில் குரல் கொடுக்கும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கிலும், தமிழக தன்மான தமிழர்களின் எழுச்சியை தடுக்கும் நோக்கிலும், இந்திய ரோவும் இலங்கை பேரினவாதமும் இணைந்து பல சதித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால் தமிழக தேர்தலில் கட்டாயம் தன்மானத் தமிழர்கள் நாம் தமிழர் கட்சியினை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஈழத் தமிழராகிய எமக்கு உண்டு எனவும் முன்னாள் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.


No comments