புத்தாண்டு விபத்து : இருவர் மரணம்!



புத்தாண்டு தினத்தன்று  நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் புசல்லாவை, எல்பொட பகுதியில் வேன் ஒன்று  வீதியைவிட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேன் ஒன்று மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்தபோது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வேனில் சுமார் 10 பேர்வரை பயணித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

No comments