அழுத்தமா! அல்லது யாழ்.வருகையா? காரணம்!
வெடுக்குநாறிமலை ஆதி சிவலிங்கம் ஆலயத்தில் சிவராத்திரி நாள் இடம்பெற்ற காவல்துறை அத்துமீறல்களின்போது கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் கொழும்பு அரசியல் தலையீடுகள் காரணமாவே விடுதலை செய்யப்பட்டு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
நேற்றுச் செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணை மீண்டும் இடம்பெற்றபோது ஆலய பூசகர் உட்பட கைது செய்யப்பட்ட எட்டுப்பேருக்கும் விளக்கமறியலை நீடிப்பதற்கு தீர்மானித்திருந்த இறுதித் தருணத்திலேயே விடுதலை உத்தரவை கொழும்பில் உள்ள சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியதாக தெரியவந்துள்ளது.
கொழும்பில் இந்து அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டில் வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகத்தின் முக்கிய பிரதிநிதியொருவர்; கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்குமாறும் ஆலயப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய உடனடி அபவிருத்திப் பணிகள் பற்றிய விபரங்களையும் பிரதிநிதி சமர்ப்பித்தாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.
அதேநேரம் கொழும்பில் உள்ள முக்கிய வெளிநாட்டுத் தூதரக அழுத்தங்கள் இருந்ததாகவும் இதன் காரணமாகவே ஜனாதிபதி செயலகம் கொழும்பில் உள்ள இந்து அமைப்பு ஒன்றின் ஒத்துழைப்புடன் ஆலய நிர்வாகத்தின் அந்த முக்கிய பிரதிநிதியை கொழும்புக்கு அழைத்து உரையாடியதாகவும் தெரியவருகின்றது.
எனினும் ஜனாதிபதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள நிலையில் மக்கள் எதிர்ப்புக்களை தவிர்க்க விடுதலை நிகழ்ந்ததாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

Post a Comment