11 வது நாளில் பிரான்ஸ் ஐரோப்பிய பாராளுமன்றத்தை சென்றடைந்தது ஈருருளிப்பயணம்;

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் 11 ஆம்நாள் ஐரோப்பிய பாராளுமன்றத்தை வந்தடைந்தது.

பிரித்தானியாவில் இருந்து 15/02/2024 ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம், லக்சம்பேர்க்,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது.

இன்று காலை 25.02.2024 சிற்றிகைம் நகரத்திலிருந்து  அகவணக்கத்துடன் மாநகர உதவி முதல்வரின் உறுதி மொழியுடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம் பிரான்சில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தை சென்றடைந்து, அங்கு கவனயீர்ப்புப் போராட்டத்தில் இணைந்து தனது இலக்கு நோக்கிய பயணதை தொடர்ந்தது, .இன்றைய போராட்டத்தில் இளையோர் ,பெண்கள்.சிறுவர்கள் அனைவரும் இணைந்து கொண்டுள்ளமை சிறப்பானதாகும்,தொடர்ந்தும் நீதிக்கான எழுச்சிப் பயணம் பிரான்சு நாட்டிற்குள் தொடர்ந்தும் பயணிக்கவுள்ளது.

அனைத்துல குமுகாயத்தின் கதவுகளைத்தட்டி தமிழீழ தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத் தர குரல் கொடுக்க கோரி தொடர்ந்தும் அறவழிப்போராட்ட செயற்பாட்டாளர்கள் கடுமையான குளிர்  காற்று மத்தியிலும் கடும்சவால்களுக்கு மத்தியிலும் உணர்வெழுச்சியுடன் ஈருருளிப்பயணத்தை இன்று 45 கிலோமீட்டர் பயணித்து ஏர்ஸ்தேன் மாநகரத்தின் முன் நிறைவு செய்தது.


தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும்

நீதிகேட்டும் தமிழீழமே எமக்கான அரசியல் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் அறவழியில் ஈருருளிப்பயணத்தினை மேற்கொள்ளும் செயற்பாட்டாளர்களை அன்புடன் வரவேற்று,தமிழர்கள் என்ற உணர்வுடன் இறுகப்பற்றி,இணைந்து பயணிக்க அன்புரிமையுடன் அழைக்கிறோம்.

தொடரும் அறவழிப்போராட்டம் பிரான்சின் கொல்மார் முலூஸ்,  மாநகரம் ஊடாகப் பயணித்து 28.02.2024 பிற்பகல்  சுவிட்சர்லாந்து பாசெல் எல்லை ஊடாக 04.03.2024 அன்று ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன் நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்துடன் இணையவுள்ளது .இப்போராட்டத்தில் இனமான உணர்வுடன் அனைத்து உறவுகளும் இணைந்து ஒரணியில் உரிமைக்குரல் எழுப்பிடுவோம்.

வாருங்கள்…

“விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்” 

- தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்.


"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"










No comments