கறுப்புக்கொடி பறக்கின்றது!



இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்பகுதிகளில் கறுப்புக் கொடி போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் சிறீஸ்கந்தவேள் புனிதப் பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(03) போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கைதான இந்திய மீனவர்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த இந்திய மீனவர்கள் அதனைக்கைவிட்டு இன்று தொழிலுக்கு திரும்பியுள்ளனர்.

இலங்கை சிறையிலடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 18ஆம் திகதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளில் கறுப்புக் கொடி கட்டி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் நேற்று முன்தினம் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தனர்.

இந்;நிலையில் “எல்லை தாண்டிய இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலைக் கண்டித்து கடலில் கறுப்புக் கொடிகளைத் தாங்கி தமது துக்கத்தை வெளிப்படுத்தவுள்ளதாக உள்ளுர் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் சிலர், இலங்கை சிறையில் உள்ள நிலையில் அவர்களை விடுவிக்குமாறு இந்திய அரசு அழுத்தம் வழங்கி வருகிறது.அதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். எமது கடல் இறைமை. எமக்கே சொந்தமான கடலை யாருக்கும் தாரை வார்க்க முடியாதெனவும் உள்ளுர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இலங்கைக்கான இந்திய தூதர் அரச மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று அழைத்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments