சுவீடன் நேட்டோவில் இணைவதற்கு ஹங்கேரிய நாடாளுமன்றம் வாக்களிக்கவுள்ளது!

நேட்டோவில் சுவீடன் இணைவதற்கான முயற்சியை ஹங்கேரி தடுத்து வந்துள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை சுவீடன் நேட்டோவில்

இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல் வாக்களிக்கவுள்ளது.


பிரதம மந்திரி விக்டர் ஆர்பனின் ஆளும் ஃபிடெஸ் கட்சியின் சட்டமியற்றுபவர்களின் ஆட்சேபனை காரணமாக இந்த விவகாரம் முன்னர் நாடாளுமன்றத்தில் முடக்கப்பட்டது.

புதிய நாடுகளை இணைப்பதற்கு 31 நேட்டோ உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவு தேவை.

கடந்த வெள்ளிக்கிழமை ஹக்கோியப் பிரதமர் விக்டர் ஆர்பன் மற்றும் சுவீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் ஆகியோர் ஹக்கோி தலைநகர் புடாபெஸ்டில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

சந்திப்பில் சுவீடனிடம் நான்கு போர் விமானங்களை வாங்குவதற்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிலையில் இன்று சுவீடன் நேட்டோவில் இணைவதற்கு ஹங்கோி இணக்கம் தெரிவித்தது.

தேசியவாத ஃபிடெஸ் அதன் கூட்டணிக் கட்சியான கிறிஸ்டியன் டெமாக்ரடிக் KDNP உடன் இணைந்து பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கொண்டுள்ளது. நேட்டோவில் இணைவதற்கு எதிர்புத் தெரிவிப்பது ஒரே ஒரு தீவிர வலதுசாரிக் கட்சியான எங்கள் தாயகம் என்ற கட்சி மட்டுமே.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பதிலளிக்கும் விதமாக ஸ்வீடன் முதன்முதலில் இராணுவ கூட்டணியில் சேர மே 2022 இல் விண்ணப்பித்தது.

பின்லாந்து தனது விண்ணப்பத்தை அதே நேரத்தில் தாக்கல் செய்து ஏப்ரல் 2023 இல் அனுமதிக்கப்பட்டது.

துருக்கி நீண்ட காலமாக சுவீடனின் நேட்டோ உறுப்புரிமையை நிறுத்தியது, குர்திஷ் குழுக்களை ஒடுக்குவதற்கு ஸ்டாக்ஹோம் இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரியது. பின்னர் அமெரிக்கா துருக்கிக்கு எவ்-16 போர் விமானங்களை வழங்க இணங்கியதால் துருக்கிய சட்டமியற்றுபவர்கள் சுவீடனின் முயற்சிக்கு ஜனவரி மாத இறுதியில் ஒப்புதல் அளித்தனர்.

No comments