ரணிலுக்கு அக்கறையில்லையெனும் சாணக்கியன்!



பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் கைதிகளை விடுதலை செய்வதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயக்கம் காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு இன்றைய தினம் (26) திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சுமார் பத்து நாட்களுக்கு முன்னராக பிரதீபன் என்பவரை வெளியில் இருந்து வந்த சிறைச்சாலை  காவல்துறை அதிகாரிகள் என்று கூறப்படுபவர்கள் தாக்கியிருந்தார்கள்.

அவரது நலனை விசாரிக்கும் நோக்கில் சிறைக்கு சென்றிருந்தேன்.முக்கியமாக வெளியில் இருந்து வந்து தாக்குதலை மேற்கொண்டவர் கடந்த காலத்தில் இராணுவத்தில் இருந்தவர்கள். நீதி மற்றும் சிறைச்சாலைகளுக்கான அமைச்சர் விஜயதாச ராஜபக்ச என்பவருக்கும் அறிய தந்திருந்தேன்.

கைதியை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமானது.

ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடிய அரசியல் கைதிகள் கற்பளித்தோ, கொள்ளை அடித்தோ அல்லது போதைப்பொருள் கடத்தியோ சிறைக்கு வந்தவர்கள் அல்ல.

சிறைச்சாலைக்கு வெளியில் இருந்து வந்தவர்களே தாக்குதல் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதனை பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியிருந்தார்கள்.

மகசீன் சிறையில் எட்டு கைதிகள் மொத்தமாக உள்ளார்கள் ஆனால் இவர்களில் நால்வரை பொது மன்னிப்பில் உடனடியாக விடுதலை செயப்படகூடிய சூழல் உள்ளது 

பாரிய குற்றம் செய்த கைதிகளுக்கே பிணை மற்றும் விடுதலை கிடைக்கும் போது அவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது வருந்தத்தக்கது. அதில் இரு சிறைக் கைதிகள் 28 வருடங்களாக சிறையில் உள்ளார் எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


No comments