ஊடகவியலாளர்களுடன் இணைந்த சிவில் அமைப்புக்கள்!

 


இலங்கை அரசினால் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தும் ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (26) வெள்ளிக்கிழமையன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஊடக அமைப்புக்களுடன் சிவில் அமைப்புக்களும் இணைந்திருந்தன.

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழ். ஊடக அமையத்தினால்; போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஊடக அமையத்துடன் இணைந்து தென்னிலங்கை முன்னணி ஊடக கூட்டமைப்பான உழகை;கும் பத்திரிகையாளர் சங்கமும் போராட்டத்தில் இணைந்திருந்தது.

யாழ்.பொது நூலகத்தில் இருந்து பேரணியாக யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்ற போராட்டகாரர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் குதித்திருந்தனர்

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் சங்கம்,அரசியல் கைதிகளை விடுதலைக்கான அமைப்பு,பல்கலைக்கழக ஊழியர் சங்கம் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் பங்கேற்புடனும் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.




No comments