சீனாவில் நிலச்சரிவு: 40 பேரைக் காணவில்லை!!
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை ஜாடோங் நகருக்கு அருகிலுள்ள இரண்டு கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த அனர்த்தத்தில் 47 பேர் காணாமல் போயுள்ளதாக சீன மத்திய தொலைக்காட்சி (CCTV) தெரிவித்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கி 2 பேர் இறந்து கிடப்பது சிசிடிவி கேமராவில் காணப்பட்டது. 200க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்
நிலச்சரிவுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள மலைப் பிரதேசமான யுன்னானில் உறைபனி மற்றும் பனிப்பொழிவை இருந்தது.
அதிகாரிகள் 200-க்கு மேற்பட்ட மீட்புப் பணியாளர்களுடன் உறைபனி மற்றும் பனிப்பொழிவுக்கு மத்தியில் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் மீட்புப் படைகள் விரைவாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்றும் முடிந்தவரை உயிரிழப்புகளைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment