ரணிலுக்காக வரமாட்டேன் :சி.வி.விக்கினேஸ்வரன்
ரணில் விக்கிரமசிங்கவை வெல்ல வைக்கவே சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கவுள்ளதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் அதனை அவர் மறுதலித்துள்ளார்.
நான் யாரிடமும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளேன் என தெரிவிக்கவில்லை.ஆனால் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் அவ்வாறு ஒரு கோரிக்கையினை வைத்தால் நான் அதை செயற்படுத்துவேன் என கூறினேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சியினரும் என்னை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குமாறு கூறினால் நான் அதை செயற்படுத்துவேன் .அதனை தவிர எந்த சந்தர்ப்பத்திலும் நான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளேன் என தெரிவிக்கவில்லையெனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது விருப்பினை ரணிலுக்கு வழங்க கோரும் சதிகள் நடக்கின்றன.இத்தகைய பின்னணியிலேயே சி.வி.விக்கினேஸ்வரனை தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment