ரணிலே நல்லம்:மகிந்தவை கைவிட்ட டக்ளஸ்!
மகிந்த ராஜபக்ச தரப்பின் தீவிர விசுவாசியாக தன்னை காண்பித்துக்கொள்ளும் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போதுள்ள நிலைமையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகினால் மாத்திரமே நாட்டினை முன்னோக்கிகொண்டு செல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள நிலைமையில் பலர் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கலாம்.ஆனால் முடங்கியிருந்த நாட்டினை ஓரளவிற்கு ஓடக்கூடிய வண்டியாக தற்போதுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாற்றியுள்ளார்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகினால் நாடு முன்னோக்கிச் செல்லும் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதனிடையே மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலுக்கு சாதகமாக களமிறங்கினாலே அன்றி ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் நான்கு பிரதான கட்சிகளிலும் முக்கியமானவர்கள் வேட்பாளர்களாக களமிறங்க கூடும். அவ்வாறு களமிறங்கினால் ஒருவரால் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்கினை பெற்றுக்கொள்ள முடியாது போய்விடும்
அவ்வாறு இருக்கும்போது ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வருவாரா என்ற கேள்வி எழுகின்றது? ரணில் ஜனாதிபதியாக வரவேண்டுமாக இருந்தால் மொட்டு கட்சியின் ஐனாதிபதிவேட்பாளராக களமிறங்குபவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சாதகமாக அமைந்தால் மாத்திரமே ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் எனவும் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment