உருளைக்கிழங்கினை பார்வையிட குழு
இலங்கை அரசினால் யாழ்ப்பாணத்திற்கு வழங்கப்பட்ட விதை உருளைக்கிழங்குகள் தொற்றுக்குள்ளாகி பயனற்றதாகியமை தொடர்பாக ஆராய்வதற்காக கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று விஜயம் செய்துள்ளது.
உலக வங்கியின் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மானிய அடிப்படையில் யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த 21 மெட்ரிக் தொன் உருளைக்கிழங்கு விதைகள் குப்பிளானில் அண்மையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது.
அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குறித்த விதை உருளைக்கிழங்குகள் பக்டீரியா தாக்கத்திற்குள்ளாமையினால் பழுதடைந்திருந்தமை தொடர்பில் கடந்த டிசம்பர் 17ஆம் திகதி கண்டறியப்பட்டது.
பக்டீரியா தாக்கத்தினால் 21 மெட்ரிக் தொன் விதை உருளைக்கிழங்குகளையும் பயன்படுத்த முடியாத நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விதை உருளைக்கிழங்கு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்கு தொடர்பாக ஆராயக் கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று இன்று விஜயம் செய்து பார்வையிட்டுள்ளது.
விவசாய அமைச்சின் விவசாயத் தொழில்நுட்ப பிரிவினர் வடமாகாண விவசாய நவீன மாக்கல் திட்ட அதிகாரிகள் ஆய்வில் கலந்துகொண்ருந்தனர்.
இதனிடையே தேசிய தாவர தடுப்பு காப்பு சேவையின் ஆலோசனையின் பின்னர் உருளைக்கிழங்கு விதைகள் தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment