யாழ். அனலைதீவில் 27 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு


யாழ்ப்பாணம் - அனலைதீவில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

அனலைதீவு கரையோர பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில் இருந்து குறித்த கஞ்சா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைப்பற்றப்ட்டுள்ளது. 

மீட்கப்பட்ட பொதிகளில் 69 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா காணப்பட்டது எனவும், அவற்றின் 27 மில்லியன் ரூபாய் பெறுமதி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments