ஆளாளுக்கு சந்தேகம்!



திருகோணமலை – நிலாவெளி, பெரியகுளம் மற்றும் இலுப்பைக்குளம் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பௌத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் மக்கள் பேரவை ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளது.

இதனிடையே தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்னம்பலம் கஜேந்திரகுமார், செ. கஜேந்திரன் ஆகியோர் உள்ளடங்கலாக 14 பேருக்கு இலங்கை காவல்துறையால்; நீதி மன்றம் மூலம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க கூடாதென தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் போராட்டமானது தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொள்ள முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனிடையே மற்றைய தமிழ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாத தடை உத்தரவு தமிழரசுக் கட்சியில் இரா. சாணக்கியன் உள்ளிட்ட சில நாடாளு மன்ற உறுப்பினர்களிற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளமை ஏனையவர்கள் மீது சந்தேகத்தை உண்டு பண்ணுவதாக மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் விகாரை அமைப்பு  விடயங்களுக்கு அவர்கள் மறைமுக ஆதரவு வழங்குகின்றார்களோ என மிகுந்த சந்தேகம் எழுவதாக இரா . சாணக்கியன் கருத்து தெரிவித்துள்ளார்.


No comments