காணியினை விடுவிப்பாராம் சந்திரசேகரன்?



வலிகாமம் வடக்கில் மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்க மாட்டோம் எனப் பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாகக் கூறவில்லை. அவர் கூறிய உண்மை விபரங்களைச் சிலர் தங்களது சொந்த அரசியல் சுயலாபத் தேவைகளுக்காகத் தவறாகத் திரிபுபடுத்திக் கூறிவருகின்றனர்" எனக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மக்களின் சொந்தக் காணிகளை அடாத்தாகக் கையகப்படுத்தி வைத்திருப்பதே எமது கொள்கை அல்ல. ராணுவத்தின் அத்தியாவசியப் பாதுகாப்புத் தேவைகளுக்காகக் கோரப்படும் குறிப்பிட்ட எல்லைக் காணிகள் தவிர்ந்த, மக்களுக்குச் சொந்தமான ஏனைய அனைத்துப் பூர்வீக நிலங்களையும் முழுமையாக விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேசி விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்" என்றார்.

கடந்த 40 வருடங்களாகப் பூட்டப்பட்டிருந்த பல சிவில் வீதிகள் புதிய அரசாங்கத்தின் கீழ் வெற்றிகரமாகத் திறக்கப்பட்டுள்ளதுடன், வடமாகாணத்தில் சிவில் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ராணுவச் சோதனைச் சாவடிகள் பெருமளவில் நீக்கப்பட்டுள்ளன. 

பலாலி ராணுவ மருத்துவமனை தற்போதைய நிலையில் தனியார் ஒருவரின் பூர்வீகக் காணியிலேயே அமைந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட காணி உரிமையாளருக்கு உரிய  நட்டஈட்டை வழங்குவதா, அல்லது அவருக்குப் பதிலாக மாற்று நிலத்தை வழங்குவதா அல்லது அந்த மருத்துவமனையை அங்கிருந்து முழுமையாக அகற்றுவதா என்பது குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் காணி உரிமையாளர்களை நேரில் அழைத்துப்பேசி ஒரு சுமுகமான உத்தியோகபூர்வ முடிவு எட்டப்படும்."

"வடக்கில் ராணுவத்தினர் தங்களது சுய தேவைக்காக மாத்திரமே விவசாயம் செய்வதாக அரசாங்க மட்டத்தில் கூறினாலும், அவர்கள் வெளியில் உள்ளூர்ச் சந்தைகளில் மரக்கறிகளைப் பெருமளவில் விற்பனை செய்து இலாபம் ஈட்டுவதாக எமக்கும் பல உத்தியோகபூர்வ முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்க்கப்படுமெனவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.


No comments