அமைச்சர் மௌனம்:புறப்பட்ட மீனவர்கள்!
இலங்கையின் கடற்றொழில் அமைச்சர டக்ளஸ் தேவானந்தாவிற்கு இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அடக்கி வாசிக்க இந்திய அரசு அழுத்தங்களை பிரயோகித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அவசரமாக இந்தியாவிற்கு அழைக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டதையடுத்து அமைதியாக அமைச்சர் இருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து இந்தியாவுக்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழகத்துக்கு 14 பேர் கொண்ட வடபகுதி மீனவர்கள் கடல் வழியாக படகு மூலம் சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக ஆளுநர் ரவி, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவர் கு.அண்ணாமலை ஆகியோரை சந்தித்து பேச தீர்மானித்துள்ளனர்.
முன்னதாக இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறலை கண்டித்து கடந்த முதலாம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடம் மகஜரொன்றை கையளித்தோம்.
மகஜர் கையளித்து 14 நாட்களுக்குள் இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடில் காத்திரமான நடவடிக்கை எடுப்போம் என சம்மேளனத்தினர் அறிவித்துள்ளனர்.
14 நாட்களுக்குள் தீர்வு காணப்படாவிடில் அடுத்து வரும் நாட்களில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சம்மேளனத்தினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment