ஐரோப்பாவில் அழிவை ஏற்படுத்துகிறது காலநிலை மாற்றம்


ஸ்லோவேனியாவில் வெள்ளம், போர்ச்சுகலில் காட்டுத் தீ, ஸ்பெயினில் வெப்ப அலை மற்றும் நோர்வேயில் நிலச்சரிவுகள் என வடக்கிலிருந்து தெற்கு நோக்கி, ஐரோப்பா மீண்டும் காலநிலைய மாற்ற நிகழ்வுகளுடன் ஐரோப்பா போராடி வருகிறது. 

நோர்வேயில் நிலச்சரிவு

தெற்கு நோர்வே மலைப்பகுதி முழுவதும் ஒரே இரவில் கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. அதிக கனமழைக்கு தயாராகுமாறு குடியிருப்பாளர்களை அதிகாரிகள் எச்சரித்த நிலையில், நாட்டின் பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது.

ஹன்ஸ் புயல் கிழக்கு நோர்வேயைத் தாக்கியதில் இருந்து குறைந்தது இரண்டு பேர் இறந்தனர். மேலும் வீடுகளின் கூரைகள் அழிக்கப்பட்டன.


நோர்வேயின் வெள்ளம் அல்லது நிலச்சரிவு காரணமாக பல சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், இரவு முழுவதும் வெளியேற்றம் தொடர்ந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

ஒஸ்லோவின் வடக்கே உள்ள பிராந்தியத்தில் 600க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதாக காவல்துறை கூறியது. நிலைமை இன்னும் தெளிவற்றதாகவும் குழப்பமானதாகவும் உள்ளது என்று தெற்கு நோர்வேயில் உள்ள காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் ஸ்வீடனைத் தாக்கிய ஹான்ஸ் புயலால் ஸ்காண்டிநேவியா மற்றும் பால்டிக் பகுதிகள் தாக்கப்பட்டு திங்கள்கிழமை நோர்வேயை அடைந்தன.

ஸ்வீடிஷ் வானிலை மற்றும் நீரியல் நிறுவனம் (SMHI) செவ்வாயன்று மத்திய ஸ்வீடனின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டது. மிகப் பெரிய அளவிலான மழை பல இடங்களில் நீரோடைகள் மற்றும் பள்ளங்களில் மிக அதிக ஓட்டங்களை ஏற்படுத்துகிறது என்று எச்சரித்தது.

ஸ்பெயினில் மற்றொரு வெப்ப அலை

ஸ்பெயினின் வானிலை நிறுவனமான AEMET, குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமை வரை வெப்பநிலை தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கிறது. தெற்கு அண்டலூசியா பிராந்தியத்தின் சில பகுதிகள் 44 C (111 F) தாண்டியுள்ளது. இந்த கோடையில் ஸ்பெயினின் மூன்றாவது வெப்ப அலை இதுவாகும்.

இந்த வார இறுதியில் மூன்று காட்டுத்தீகள் ஏற்பட்டதாகவும் அவை நேற்று  செவ்வாய்க்கிழமைக்குள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


ஸ்பெயினின் வடகிழக்கு பகுதியில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்டது. சுமார் 600 ஹெக்டேர் (1,500 ஏக்கர்) எரிந்துள்ளதாகவும், 150 பேர் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் தென்கிழக்கில், போர்ச்சுகலின் எல்லைக்கு அருகில், தீயணைப்பு வீரர்கள் இன்னும் ஒரு தீயுடன் போராடி வருகின்றனர். இது கிராமப்புற விடுதிகளில் உள்ள சுமார் 20 பேரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

போர்த்துக்கல்லில் காட்டுத்தீ

நேற்று செவ்வாயன்று போர்ச்சுகலில் மூன்று பெரிய தீப்பிழம்புகள் எரிந்து கொண்டிருந்தன. தென்மேற்கில் மிகப்பெரிய தீ ஒடெமிரா நகருக்கு அருகில் இருந்தது இச்சம்பவம் நடந்தது.

குறைந்தது 7,000 ஹெக்டேர் (17,300 ஏக்கர்) தீயை எரித்த ஒடெமிரா தீயை எதிர்த்துப் போராட சுமார் 1,000 தீயணைப்பு வீரர்கள், 320 வாகனங்கள் மற்றும் ஒன்பது விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போர்த்துக்கல்களில் தேசிய குடிமைப் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.


சுமார் 1,500 பேர், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வெப்பநிலை உயரும்போது சமீபத்திய தொடர் காட்டுத்தீ ஏற்படுகிறது.

லிஸ்பனுக்கு வடகிழக்கே சுமார் 80 கிலோமீட்டர்கள் (50 மைல்) தொலைவில் உள்ள சாண்டரேம் நகரம், திங்களன்று 46.4 C (115.5 F) இல் ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது.

ஸ்லோவேனியா

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்லோவேனியா நாட்டில் கடந்த 30 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கனமழையால் மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப் பெருக்கில் குறைந்தது 6 பேரைக் கொல்லப்பட்டனர். மக்கள் குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ன.

வடமேற்கு மற்றும் மத்திய ஸ்லோவேனியாவைச் சுற்றியுள்ள வீடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


கட்டிடங்கள் மற்றும் பாலங்களை அழித்து 500 மில்லியன் யூரோக்கள் ($549 மில்லியன்) சேதத்தை ஏற்படுத்தியது.

ஸ்லோவேனியாவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் பல மில்லியன் டொலர்கள் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்குச் சென்று சேதங்களைச் சுத்தம் செய்யும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

கிறீஸ்

கிறீஸ் நாட்டில் காட்டுத் தீ பரவியதால் அப்பகுதியில் மக்கள் வெளியேற்றப்பட்டனர். காட்டுத்தீயால் அதிக வெப்பநிலை உணரப்பட்டது. அத்துடன் அப்பகுதிய மாசு படுத்தப்பட்டது.


No comments