யாழ்.அக்கரை கடலில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் அச்சுவேலி அக்கரை கடலில் மூழ்கி நேற்றைய தினம் புதன்கிழமை முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெருடாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சிவராசா (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments