பிறந்து மூன்றாவது நாளிலிருந்து காய்ச்சல் - எட்டாவது நாள் உயிரிழப்பு


பிறந்து எட்டு நாட்களான குழந்தை 5 நாட்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. 

யாழ்ப்பாணம் நயினாதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த குழந்தை பிறந்து மூன்று நாட்களான நிலையில் காய்ச்சலினால் பிடிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து 19ஆம் திகதி நயினாதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக அன்றைய தினமே யாழ்.போதனா வைத்தியலைக்கு மாற்றப்பட்டது. 

போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. 

No comments