யாழில். வன்முறை கும்பல்களை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் களமிறக்கம்


யாழ்ப்பாணத்தில் வீடெரிப்பு சம்பவங்கள் , வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் வன்முறை கும்பல்களை கைது செய்வதற்கு மூன்று சிறப்பு பொலிஸ் பிரிவுகள் களமிறங்கியுள்ளன. 

யாழ்.மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனவிரத்தின் வழிகாட்டலில் , யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் கீழ் குறித்த மூன்று சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் , அவைகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

வன்முறை கும்பல்களை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர் எனவும் , அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments