தனியே தன்னந்தனியே சுமா அறிக்கை



நாளை இந்திய தூதரரை கூடட்டமைப்பு சந்திக்கவுள்ள நிலையில் ரணில் தொடர்பில் காட்டமான தனித்து அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார் சுமந்திரன்.

இலங்கையின் அரசியலமைப்பில் ஒரு பகுதியாகக் காணப்படும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கூட, ஜனாதிபதி உள்ளிட்ட ஆளும் தரப்பினால் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலைமையே காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அது அரசியலமைபை முழுமையாக மீறுவதாக அமையும் எனக் கூறியுள்ள எம்.ஏ.சுமந்திரன், அரசியலமைப்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம் என இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம், நீண்டகாலமாக தாமதமாகிவரும் மாகாண சபைத் தேர்தலை நடத்துதல், ரணில் விக்ரமசிங்கவினால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடுகள் தொடர்பாக தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கையொப்பத்துடன் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும், இலங்கையின் தமிழ் சமூகத்திற்கு சுயமரியாதை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யவும் இலங்கை தனது உறுதிமொழியை நிறைவேற்றும் என்றும்; ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்.

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் ஆகியன இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்கும், அதனை எளிதாக்குவதற்கும் இன்றியமையாத கூறுகளாகும் என பிரதமர் தெளிவாகக் கூறியிருந்தார் எனவும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments