யாழில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கண்காட்சி




யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 15, 16ஆம் திகதிகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் விழிப்புணர்வு செயற்திட்டமும் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.

குளோக்கல் 2023 எனும் தொனிப்பொருளில் முற்பகல் 9 மணிமுதல் முற்றவெளித் திடலில் (வீரசிங்கம் மண்டபம் முன்பாக) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உள்ளிட்ட பல சேவைகளுக்கான விழிப்புணர்வு செயற்திட்டமும் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், வெளிநாட்டுத் தொழில்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் வேலைவாய்ப்பு, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் தொழில்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகள், ஆலோசனைச் சேவைகள், பெற்றுக்கொண்ட திறன்களுக்கான அரசாங்கச் சான்றிதழ்கள், தொழிற்துறை பயிற்சிக்கான வாய்ப்புக்கள் மற்றும் வழிகாட்டுதல்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு, தொழிலாளர்களுக்கான கல்வி வாய்ப்புகள், உற்பத்திதிறன் ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் கண்காட்சியில் பகிரப்படவுள்ளதுடன், இளைஞர், யுவதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், தொழிலாளர் திணைக்களம் உள்ளிட்ட தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனைத்து துணை நிறுவனங்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இலங்கை மத்திய வங்கி, ஊழியர் சேமலாப நிதியம், இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை, சமூக சேவைகள் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்கள் அணுசரணை வழங்குகின்றன.

யாழ்ப்பாணத்தில் உள்ள அல்லது வடமாகாண இளைஞர் யுவதிகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் கற்கைகள், தொழிற்பயிற்சிகள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தேவைகளை நிவர்த்தி செய்ய இந்த க்ளோக்கல் வழிகாட்டி கண்காட்சியில் பங்குபற்றி தமது வேலைவாய்ப்பு தொடர்பான விளக்கங்களையும், வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள WWW.GLOCAL.LK என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments