மன்னம்பிட்டி பேருந்து விபத்து : உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு


மன்னம்பிட்டியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஏறாவூரைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட மூவரும், ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனும், ஆனைமடுவ கலாவத்தை பிரதேசங்களைச் சேர்ந்த இரு பல்கலைக்கழக மணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மேலும் ஒரு பெண் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக அதிகதித்துள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட சாரதி, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், போதை பொருள் பாவித்துள்ளாரா என்பது தொடர்பாக விசாரணைகள் இடமபெற்று வருவதாகவும் மன்னம்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments