முன்னணி முன்னுக்கு வந்தது!
வலிகாமம் வடக்கின் உயர்பாதுகாப்பு வலயத்தின் தையிட்டியில் புதிததாக அமைக்கப்பட்டுள்ள விகாரையினை அகற்ற கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாட்டில் இன்றைய தினம் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஊடக பேச்சாளர் சுகாஸ் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஆதரவாளர்கள் சிலர் என பத்திற்கும் குறைவானோர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்,
இதனிடையே உயர்பாதுகாப்பு வலயத்தினையண்டிய வசாவிளான் பகுதியில் வீதியால் பயணித்த பாடசாலை மாணவியிடம் பாலியல் இம்சையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் பெர்துமக்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை மதியம் சிப்பாய் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தனிமையில் சென்ற பாடசாலை மாணவியை பின்தொடர்ந்த இராணுவ சிப்பாயை சிறைப்பிடித்து காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
தமிழ் இராணுவ சிப்பாயான அந்நபர் கடந்த காலத்திலும் அத்தகைய குற்றச்சாட்டுக்களில் சிக்கியிருந்தாரென கூறப்படுகிறது.
Post a Comment