18வருடங்களின் பினனர் பழி

 




இலங்கை இராணுவ புலனாய்வு பிரவின் முக்கியஸ்தரான லெப்டினன்ட் கேர்ணல் துவான் முத்தலிப், கொலையில் தொடர்புடைய சிங்கள நபர் ஒருவர் 18வருடங்களின் பின்னராக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நாரஹேன்பிட்டியவில் வைத்து 2005 ஒக்டோபர் 29ஆம் திகதியன்று துவான் முத்தலிப சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்டிருந்தார்.

முத்தலிப்பை படுகொலைச் செய்வதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தால் விடுதலைச் செய்யப்பட்ட நபரான சஞ்ஜீவ (வயது 54) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இவர் ஒரு வர்த்தகர் ஆவார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், ரி-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி, அவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (20) களனியிலுள்ள  தன்னுடைய வீட்டில் இருந்து மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவரில் ஒருவர், அவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்துள்ளனர்..

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கீழே விழுந்ததன் பின்னரும் துப்பாக்கிதாரி அவர் மீது பல தடவைகள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தன்னுடைய நண்பருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.

கொல்லப்பட்டவரை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொழும்பு புலனாய்வாளர் என சிங்கள ஊடகங்கள் குற்றஞ்;சாட்டியிருந்தன.

துப்பாக்கிதாரி நன்கு பயிற்சி பெற்றவர் என்று தெரிவித்த காவல்துறையினர், ஒப்பந்த அடிப்படையில் கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.


No comments