மத அனுஸ்டானங்களை மேற்கொள்வதற்கான உரிமை?

 


வட மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து மதங்களும் தங்களுடைய தனித்துவமான மத அனுஸ்டானங்களை மேற்கொள்வதற்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றதென வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

யுhழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் என்னை வாழ்த்துவதற்கு வருகை தந்த மத குருமார் சில கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்கள். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அதற்கு தீர்வு பெற்று தருமாறு கூறியிருக்கின்றார்கள்.

எனவே மக்கள் பிரச்சினைகளை சரியான முறையில் அணுகி அதற்கு தீர்வுகளை பெற்று தருவதற்கு முயற்சிப்பேன்.அதற்கான சகல ஏற்பாடுகளையும் எடுக்க நான் முயற்சிக்கின்றேன்.

அதேபோல யாழ்ப்பாண மக்களுக்கு நீண்ட காலமாக இருக்கின்ற குடிநீர் பிரச்சினையை நான் உணர்ந்திருக்கின்றேன். நான் கூட இங்கு வருகின்றபோது குடிநீர் பிரச்சினையை தனிப்பட்ட ரீதியாக பிரச்சனையை உணர்ந்திருக்கின்றேன். எனவே குடிநீர்ப்பிரச்சனையயை தீர்க்க நிச்சியமாக முக்கியமாக கவனம் எடுப்பேன் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இலங்கை ஜனாதிபதியை சந்தித்த மல்வத்தபீடாதிபதிகள் வடகிழக்கில் பௌத்த விகாரைகனை புதிதாக அமைப்பிதிலுள்ள தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்க கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments