புதுக்குடியிருப்பில் இருந்து சென்ற பேருந்து தம்புள்ளையில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு




முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் டிப்பர் வாகனமும் விபத்துக்கு உள்ளானதில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 

தம்புள்ளைக்கு அருகில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி உள்ளிட்ட 08 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் புதுக்குடியிருப்பு , கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 




No comments