தாய்வானைச் சுற்றிவளைத்து போர் ஒத்திகையை தொடங்கியது சீனா


சீனா - தைவான் இடையேயான பதற்றத்துக்கு மத்தியில், தைவானுக்கு அருகே சீன போர்க்கப்பல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

சீனாவின் எதிர்ப்புக்கிடையே தைவான் அதிபரும் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரும் சந்தித்ததற்கு பதிலளிக்கும் விதமாக சீனா ராணுவ ஒத்திகையை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தைவானுக்கு 126 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீனாவின் பிங்டன் தீவில் சீன போர்க்கப்பல், தாக்குதல் நடத்தி பயிற்சி மேற்கொண்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள தைவான் பாதுகாப்பு அமைச்சகம், மோதல்களை அதிகரிக்காமல் அமைதியாகவும் பகுத்தறிவுடனும் இதனை அணுகுவோம் என தெரிவித்துள்ளது.

No comments