புதிது புதிதாக முளைக்கும் காளான்கள?



 யாழ்ப்பாணத்தில் பல்கி பெருகிவரும் புதிய புதிய மத அமைப்புக்களினால் நாள் தோறும் சர்ச்சைகள் மூண்டுவருகின்றது. இந்நிலையில் அரசுக்குச் சொந்தமான அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி நெசவு சாலை முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை ஈழம்; சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.  

நெசவு சாலை யுத்தத்துக்குப் பின்னர் இயங்காத நிலையில் கட்டிடத்தில் மதஸ்தலம் ஒன்று அமைக்கப்பட்டு பிரார்த்தனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

மதஸ்தலத்துக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


No comments