பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முன்னாள் சட்டமா அதிபரை விசாரணைக்கு அழைத்துள்ளனர் 


முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு (TID) நாளைய தினம் புதன்கிழமை ஆஜராகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதிப்புரட்சி குறித்த அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறவே முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

No comments