பிரிந்து சென்ற மனைவியை பார்க்க சென்றவரை அடித்து கொலை செய்த மாமனார்


பிரிந்து வாழும் மனைவியை பார்க்க சென்ற கணவனை , மனைவியின் தந்தை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ஆறுமுகம்பிள்ளை துஷ்யந்தன் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார். 

குறித்த நபருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து தனது தந்தையின் வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் குறித்த நபர் இன்றைய தினம் மனைவியை பார்க்க அவரது வீட்டுக்கு சென்ற போது மனைவியின் தந்தை அவருடன் முரண்பட்டுள்ளார். 

முரண்பாடு முற்றி மண் வெட்டி பிடியினால் மனைவியின் தந்தை தாக்கியதில் படுகாயம் அடைந்த நபர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments