பொடியப்பு பியசேன விபத்தில் உயிரிழந்துள்ளார்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன விபத்தில் சிக்கிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை; உந்துருளியில் சென்றுக் கொண்டிருந்த அவர், பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில் சென்ற பேருந்துடன் மோதி பியசேன விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த அவர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2010 ஆம் ஆண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டதில் போட்டியிட்டு பியசேன நாடாளுமன்றுக்கு தெரிவாகியிருந்தார்.
எனினும் பின்னர் கூட்டமைப்பினை கைவிட்டு மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டார்.
அதேநேரம் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் அதில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment