டக்ளஸ் படையணியே தாக்கியதா?



இந்திய இழுவைப்படகுகளை தாக்கி கலைக்க இரும்பு படகுகளை தருவதாக தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா தற்போது இந்தியக் கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுமென தெரிவித்துள்ளார். 

இன்று தமிழகத்தின் நாகை மாவட்ட மீனவர்கள் மீது வடக்கில் மீன்பிடியில் ஈடுபடும் சிங்கள மீனவர்கள் நடத்திய வாள் வெட்டு தாக்குதலில் நான்கு இந்திய மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். 

இந்நிலையில் இந்திய கடற்றொழிலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறையினை கேட்டுள்ளதுடன், அவ்வாறான சம்பவம் நடைபெற்றிருக்குமானால் கண்டிக்கப்பட வேண்டும்  எனவும்  தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சூழலிலும் யாரும் வன்முறைகளை கையில் எடுப்பதை  அனுமதிக்க முடியாது. எமது தொப்புள்கொடி உறவுகள் பாதிக்கப்படாத வகையிலே விவகாரம் கையாளப்பட வேண்டும். 

இலங்கையின் கடல் வளத்தினை அழிக்கும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்குபல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். 

ராஜதந்திர ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அவை போதுமானளவு பலனளிக்காத நிலையில், அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இந்தியத் தலைவர்களுடன் தொடர்பாக கலந்துரையாடி வருகிறேன். 

இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் மற்றும்  இந்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருடனும் விடயம் தொடர்பாக பிரஸ்தாபித்திருந்ததுடன், விரைவில் புதுடெல்லி மற்றும் தமிழகத்தின் மேலும் பல உயர் மட்டத் தலைவர்களையும் சந்தித்து பேச்சுக்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத அத்துமீறல்கள் சடுதியாக அதிகரித்துள்ளது.


No comments