நிலாவரை விவகாரம்:சட்டமா அதிபரிடம் ஆலோசனை!



 யாழ்ப்பாணம் நிலாவரை கிணற்று பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்கான ஆவணத்தினை இம் இறுதிக்குள் தயார் செய்து மன்றில் சமர்ப்பிக்குமாறு இலங்கை காவல்துறைக்கு  மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இன்று புதன் கிழமை புதன்கிழமை மல்லாகம் நீதிமன்றில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கினை முன்னொண்டு செல்வதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு ஏன் அனுப்பப்படவில்லை என காவல்துறையினை நோக்கி நீதிபதி வினவியிருந்தார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து நிலாவரை கிணறு அமைந்துள்ள வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில்  அத்திபாரம் போன்று வெட்டுவதற்கு இரண்டு தடவைகள் முயற்சித்த நிலையில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். எதிர்ப்புக்களை அடுத்து அங்கு தொல்லியல் திணைக்களத்தின் முயற்சிகள் கைவிடப்பிடடிருந்தன.

பின்னர் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு தவிசாளருக்கு தொல்லியல் திணைக்களத்தின் கருமங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு அதிகாரம் இல்லை என அதிகாரிகளால் கூறப்பட்டது.இந் நிலையில் பெருந்தொகை இளைஞர்களை கூட்டிவந்து தமது அரச கருமத்திற்கு தவிசாளர் தியாகராஜா நிரோஸ் உள்ளிட்டவர்கள் தடை ஏற்படுத்தினர் எனத் தெரிவித்து மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக வழக்கு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


No comments