யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் அடித்துக்கொலை


யாழ்ப்பாணம் அத்தியடி பகுதியில் பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். 

அத்தியடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் கலாநிதி (வயது 52) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். 

தமது வீட்டுக்கு , வீட்டு வேலைகளை செய்வதற்கும் , ஆடுகளுக்கு குழைகள் வெட்டவும் என ஒருவர் வருகின்றவர் எனவும் , அவர் நேற்றைய தினமும் வந்திருந்த போது , நான் வீட்டுக்குள் இருந்தேன். அம்மா தான் அவருடன் கதைத்துக்கொண்டு இருந்தார். பிறகு இருவரும் வாக்கு வாதப்படுவது கேட்டது, சிறிது நேரத்திற்குள் அம்மா பெரிய சத்தமாக கத்தினார். சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த போது , அம்மா இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்நபரை அவ்விடத்தில் காணவில்லை என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது , கொலையானவரின் மகள் வாக்குமூலம் அளித்துள்ளார். 

மரக்கட்டை ஒன்றினால் தாக்கியே பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாவும் , சந்தேகநபர் தொடர்பிலான தகவல் கிடைக்கப்பெற்று உள்ளன. அவற்றின் அடிப்படையில் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம் என யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். 

No comments