மருத்துவ பீட மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்


போலி குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதை நிறுத்த வலியுறுத்தி மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை கொழும்பு நகர மண்டப பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வசந்த முதலிகேவின் விடுதலையை வலியுறுத்தியும், மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்த வலியுறுத்தியும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பி இருந்தமையும் குறிப்பிடதக்கது.

No comments