152 பேர் இன்று இலங்கைக்கு!



சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடாவுக்கு செல்ல முற்பட்ட நிலையில் வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 152 பேர் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 08ஆம் திகதி அவர்கள் பயணித்த கப்பல் பழுதடைந்தமையை அடுத்து அவர்கள் ஜப்பானிய கப்பல் ஒன்றினால் மீட்கப்பட்டு வியட்நாமிற்கு அழைத்து செல்லப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்களில் 152 பேர், மீளவும் நாடு திரும்புவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ள நிலையில், அவர்களை விசேட விமானம் ஒன்றின் ஊடாக இன்று நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

முன்னதாக இலங்கை திரும்ப மறுப்பு தெரிவித்து இரு இளைஞர்கள் தற்கொலைக்கு முயன்றிருந்தனர்.

அவர்களுள் ஒரு இளைஞன் சிகிச்சை பயனின்றி மரணித்திருந்ததும் அவனது உடலம் அண்மையில் சாவகச்சேரிக்கு எடுத்துவரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


No comments