போதையில் குழந்தையை துஸ்பிரயோகம் செய்த தந்தை கைது!


பருத்தித்துறை பகுதியில் மூன்று வயதேயான தனது பெண் குழந்தையை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 

மது போதையில் இருந்த தனது கணவன் , தனது பெண் பிள்ளையை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என குழந்தையின் தாயார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் பிரகாரமே தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , குழந்தையை மருத்துவ பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். 

No comments