அம்மான் படையணி:சிறந்த நகைச்சுவை !

  


வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த உருவாகியுள்ளதாக சொல்லப்படும் அம்மான படையணி நல்லதொரு நகைச்சுவையென  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் இளைஞர் படையணி ஒன்று உருவாகியிருப்பதாக அறிந்துள்ளமை இவ்வாண்டின் சிறந்த நகைச்சுவைடியெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போதை பொருள் பாவனையை கருணா தடுத்து நிறுத்த போவதாக கூறுகின்றார் ஆனால் அவருடைய போதை பொருள் பாவனையை யார் தடுத்து நிறுத்துவது என்பதே கேள்வியாகும்.

நாள் ஒன்றின் 24 மணித்தியாலத்தில் 20 மணித்தியாலம் போதையில் இருக்கும் விநாயகமூர்த்தி முரளிதரன் எவ்வாறு போதையை தடுத்து நிறுத்த போகின்றார் என தெரியவில்லை.

வடக்கு கிழக்கை கருணா திருத்த வேண்டிய அவசியம் இல்லை .முதலாவதாக அவர் அந்த பாவனையில் இருந்து விடுபட்டால் நாளடைவில் அனைவரும் திருந்தி கொள்வார்கள் .

விடுதலை புலிகளின் அமைப்பில் இருந்து வெளியே வந்த பின் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) முழுமையான போதை பழக்கத்திற்குள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாகவும் யோகேஸ்வரன் தெரிவித்தார்.


No comments