ரணிலுக்கு சரியான ஞாபக மறதி!



மக்கள் போராட்டத்தினால் முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டதை தற்போதைய ஜனாதிபதி மறந்துவிட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

அதனை ஞாபகப்படுத்தியிருந்தால் இவ்வளவு பாரதூரமான அடக்குமுறையை மேற்கொண்டிருக்க மாட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மோசடி அரசாங்கத்தை மாற்றுவதற்கு தலையிட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி முதல் இதுவரை 3500 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 1200 இற்கும் அதிகமானோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சஜித் பிரேமதாச கூறுகிறார்.

டைட்டானிக் கப்பலைப் போன்று நாடே மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில், தற்போதைய அரசாங்கம் முழு நாட்டு மக்களையும் மரணப் படுக்கைக்கு இட்டுச் செல்கிறது என்றும், அந்த அவலத்தை நினைவு கூறும் வகையில் அரசாங்கம் விழாக்களை நடத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

No comments