மகன் சுவிசில்: தனிமையில் வசித்த தாய் சடலமாக மீட்பு!


யாழ்ப்பாணம் இணுவில் மஞ்சத்தடி கொட்டம்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த பெண்ணின் 4 பிள்ளைகளில் ஒருவர் இயக்கச்சி பகுதியிலும், இருவர் சுவிஸ் நாட்டிலும் வசித்து வருவதோடு ஒரு பிள்ளை இறந்த நிலையிலும் உறவினர்களின் உதவியுடன்  தெய்வேந்திரம் வசந்தி எனும்  62வயதான குறித்த வயோதிப பெண் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வழமை போல் அவரது சகோதரர் மதிய உணவை வழங்குவதற்காக குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற நிலையில் சடலமாக தனது சகோதரியை இனங்கண்ட நிலையில் கோப்பாய் பொலிசாருக்கு அறிவித்ததோடு சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். 

No comments