சட்டவிரோத மீன்பிடி: குழுவொன்று அகப்பட்டுள்ளது!.



தென்னிலங்கையிலிருந்து வருகை தந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட  குழுவொன்று அகப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கடலில் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையில் ஒன்றான கடலுக்குள் ஒளிபாச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கொக்கிளாய் கடற்பரப்பில் 3 படகுகளும்,மாத்தளன் கடற்பரப்பில் ஒரு படகும், வலைஞர்மடம் கடற்பகுதியில் இரண்டு படகுகள் என மொத்தமாக 6 படகுகளுடன் 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட நபர்களையும் சான்றுப் பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களம் ஈடுபட்டுள்ளது.

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடற்தொழில் நடவடிக்கையில் சில மீனவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நேற்று முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments